General Tamil

6th Tamil Unit 8 Questions

31. கீழ்க்கண்ட கூற்றுடன் தொடர்புடையது எது?

அந்தப் பாத்திரத்தில் இட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனைக் கொண்டு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் உணவு அளிக்கலாம்.

A) அட்சய பாத்திரம்

B) தங்கத்தட்டு

C) அமுதசுரபி

D) இவற்றில் ஏதுமில்லை

32. கோமுகி பொய்கையின் நீருக்குமேல் தோன்றிய ‘அமுதசுரபி’ என்னும் பாத்திரத்தை வணங்கிக் கையில் எடுத்தவர் யார்?

A) புத்த துறவி

B) மணிமேகலை

C) தீவதிலகை

D) இவர்களில் யாருமில்லை

33. மணிமேகலையே! உயிர்களின் பசிபோக்கும் அமுதசுரபியை நீ பெற்றுள்ளாய். இனி இவ்வுலக உயிர்களுக்குப் பசி இல்லாமல் போகும்படி உணவு வழங்கி உயர்வு பெறுவாயாக! – என்று மணிமேகலையிடம் கூறியது யார்?

A) அசரீரி

B) தீவதிலகை

C) புத்த துறவி

D) ஆதிரை

34. உயிர்களுக்குப் பசி இல்லாமல் போகும்படி உணவு வழங்கக் கூடிய திறன்வல்ல அமுதசுரபியை பெற்ற பிறகு, யாரிடம் உணவு பெறச் செல்கிறாள் மணிமேகலை?

A) பூம்புகார் ஊர் மக்களிடம்

B) தீவதிலகை

C) புத்த துறவி

D) ஆதிரை

35. ‘அமுதசுரபி’ முதன்முதலில் யாரிடம் இருந்தது?

A) அறவண அடிகள்

B) தீவதிலகை

C) மணிமேகலா தெய்வம்

D) ஆபுத்திரன்

36. மணிமேகலையின் பெற்றோர் யார்?

A) கோவலன் – கண்ணகி

B) கோவலன் – மாதவி

C) தெய்வக்குழந்தை

D) இவற்றில் ஏதுமில்லை

37. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு __________?

A) இலங்கைத் தீவு

B) இலட்சத் தீவு

C) மணிபல்லவத் தீவு

D) மாலத் தீவு

38. மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் ___________?

A) சித்திரை

B) ஆதிரை

C) காயசண்டிகை

D) தீவதிலகை

39. _______________ அமுதசுரபியில் உணவை இடுகிறாள். ______________ அமுதசுரபியைக் கொண்டு, உடல் குறையுற்றோர், பிணியாளர், ஆதரவு அற்றோர் ஆகியோருக்கு உணவு அளிக்கிறாள். பின்னர்ப் பூம்புகாரில் உள்ள சிறைச்சாலைக்குச் சென்று அங்கு உள்ளவர்களுக்கும் உணவிடுகிறாள்.

A) சித்திரை, மணிமேகலா தெய்வம்

B) ஆதிரை, மணிமேகலை

C) காயசண்டிகை, அறவண அடிகள்

D) தீவதிலகை, ஆபுத்திரன்

40. அன்பிற்குரிய ஆதிரையே, ஏழை மக்களின் பசியைப் போக்குவதே மேலான அறம். உணவு கொடுத்தவர்களே உயிரைக் கொடுத்தவர்கள் என்பதை உணர்ந்துள்ளேன். அதனால், இந்தப் பாத்திரத்தில் இருக்கும் உணவைப் பசியால் வாடும் மக்களுக்கு எல்லாம் வழங்கப் போகின்றேன் – என்று கூறியவர் யார்?

A) மணிமேகலை

B) பூம்புகார் மன்னன்

C) காயசண்டிகை

D) தீவதிலகை

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!