General Tamil

6th Tamil Unit 8 Questions

61. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?

I. காரணப்பெயர்: நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதிப் பெயரிட்டனர். இவ்வாறு காரணத்தோடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் காரணப்பெயர் எனப்படும். (எ.கா.) நாற்காலி, கரும்பலகை

II. காரணப் பொதுப்பெயர், காரணச் சிறப்புப்பெயர் எனக் காரணப் பெயர் இரு வகைப்படும்.

III. காரணப் பொதுப்பெயர்: காரணப்பெயர் குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறித்தால் அது, காரணப்பொதுப்பெயர் எனப்படும். (எ.கா.) பறவை, அணி

IV. காரணச் சிறப்புப்பெயர்: குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களுள் ஒன்றை மட்டும் சிறப்பாகக் குறிப்பது காரணச்சிறப்புப்பெயர் ஆகும். (எ.கா.) வளையல், மரங்கொத்தி

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

62. இடுகுறிப்பெயரை குறிப்பிடுக.

A) பறவை

B) மண்

C) முக்காலி

D) மரங்கொத்தி

63. காரணப்பெயரை குறிப்பிடுக.

A) மரம்

B) வளையல்

C) சுவர்

D) யானை

64. இடுகுறிச்சிறப்புப் பெயரை குறிப்பிடுக.

A) வயல்

B) வாழை

C) மீன்கொத்தி

D) பறவை

65. பறவை, அணி – கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?

A) இடுகுறிச் சிறப்புப்பெயர்

B) காரணச் சிறப்புப்பெயர்

C) காரணப்பெயர்

D) காரணப் பொதுப்பெயர்

66. நாற்காலி, கரும்பலகை – கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?

A) இடுகுறிச் சிறப்புப்பெயர்

B) காரணச் சிறப்புப்பெயர்

C) காரணப்பெயர்

D) காரணப் பொதுப்பெயர்

67. வளையல், மரங்கொத்தி – கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?

A) இடுகுறிச் சிறப்புப்பெயர்

B) காரணச் சிறப்புப்பெயர்

C) காரணப்பெயர்

D) காரணப் பொதுப்பெயர்

68. மா, கருவேலங்காடு – கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?

A) இடுகுறிச் சிறப்புப்பெயர்

B) காரணச் சிறப்புப்பெயர்

C) காரணப்பெயர்

D) காரணப் பொதுப்பெயர்

69. மரம், காடு – கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?

A) இடுகுறிச் சிறப்புப்பெயர்

B) காரணச் சிறப்புப்பெயர்

C) இடுகுறிப் பொதுப்பெயர்

D) காரணப் பொதுப்பெயர்

70. அன்பினில் இன்பம் காண்போம்; அறத்தினில் நேர்மை காண்போம்; துன்புறும் உயிர்கள் கண்டால்; துரிசறு கனிவு காண்போம்; வன்புகழ் கொடையிற் காண்போம்; வலிமையைப் போரில் காண்போம்; தன்பிறப் புரிமை யாகத் தமிழ்மொழி போற்றக் காண்போம் – என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?

A) அ.முத்தரையனார், மலேசியக் கவிஞர்

B) பாவலரேறு பெருஞ்சித்திரனார்

C) நாமக்கல் கவிஞர்

D) கண்ணதாசன்

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!