General Tamil

6th Tamil Unit 8 Questions

51. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.

II. பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவையாவன: பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II அனைத்தும் தவறு

D) I, II அனைத்தும் சரி

52. பொருளைக் குறிக்கும் பெயர் _______________ எனப்படும். இஃது உயிருள்ள பொருள்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிக்கும். (எ.கா.) மரம், செடி, மயில், பறவை, புத்தகம், நாற்காலி.

A) இடப்பெயர்

B) சினைப்பெயர்

C) பண்புப்பெயர்

D) பொருட்பெயர்

53. ஓர் இடத்தின் பெயரைக் குறிக்கும் பெயர் _____________ எனப்படும். (எ.கா.) சென்னை, பள்ளி, பூங்கா, தெரு.

A) இடப்பெயர்

B) சினைப்பெயர்

C) பண்புப்பெயர்

D) பொருட்பெயர்

54. காலத்தைக் குறிக்கும் பெயர் ___________ எனப்படும். (எ.கா.) நிமிடம், நாள், வாரம், சித்திரை, ஆண்டு.

A) இடப்பெயர்

B) சினைப்பெயர்

C) பண்புப்பெயர்

D) காலப்பெயர்

55. பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர் ____________ எனப்படும். (எ.கா.) கண், கை, இலை, கிளை.

A) இடப்பெயர்

B) சினைப்பெயர்

C) பண்புப்பெயர்

D) காலப்பெயர்

56. பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர் ____________ எனப்படும். (எ.கா.) வட்டம், சதுரம், செம்மை, நன்மை.

A) இடப்பெயர்

B) சினைப்பெயர்

C) பண்புப்பெயர்

D) காலப்பெயர்

57. தொழிலைக் குறிக்கும் பெயர் ____________ எனப்படும். (எ.கா.) படித்தல், ஆடுதல், நடித்தல்.

A) தொழிற்பெயர்

B) சினைப்பெயர்

C) பண்புப்பெயர்

D) காலப்பெயர்

58. அறுவகைப் பெயர்ச்சொற்களுக்கான சான்றுகளை தொடரில் அமைத்து எழுதுவோம் – சரியானது எது?

I. காவியா புத்தகம் படித்தாள் – பொருட்பெயர்; காவியா பள்ளிக்குச் சென்றாள் – இடப்பெயர்

II. காவியா மாலையில் விளையாடினாள் – காலப்பெயர்; காவியா தலை அசைத்தாள் – சினைப்பெயர்.

III. காவியா இனிமையாகப் பேசுவாள் – பண்புப்பெயர்; காவியாவுக்கு நடனம் ஆடுதல் பிடிக்கும் – தொழிற்பெயர்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) III மட்டும் சரி

59. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?

I. நம் முன்னோர் பெயர்ச்சொற்களை அவை வழங்கும் அடிப்படையில் இடுகுறிப்பெயர், காரணப்பெயர் என இருவகைப்படுத்தினர்.

II. இடுகுறிப்பெயர்: நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் பெயரிட்டு வழங்கினர். அவ்வாறு இட்டு வழங்கிய பெயர்கள் இடுகுறிப்பெயர்கள் ஆகும். (எ.கா.) மண், மரம், காற்று

III. இடுகுறிப் பொதுப்பெயர், இடுகுறிச் சிறப்புப்பெயர் என இடுகுறிப்பெயர் இரண்டு வகைப்படும்.

A) I, II மட்டும் சரி

B) I, II, III அனைத்தும் சரி

C) II மட்டும் சரி

D) III மட்டும் சரி

60. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?

I. இடுகுறிப் பொதுப்பெயர்: ஓர் இடுகுறிப்பெயர் அத்தன்மை உடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறிப்பது இடுகுறிப் பொதுப்பெயர் எனப்படும். (எ.கா.) மரம், காடு.

II. இடுகுறிச் சிறப்புப்பெயர்: ஓர் இடுகுறிப்பெயர் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் குறிப்பது இடுகுறிச் சிறப்புப்பெயர் எனப்படும். (எ.கா.) மா, கருவேலங்காடு.

A) I, II அனைத்தும் சரி

B) I மட்டும் சரி

C) II மட்டும் சரி

D) I, II இரண்டும் தவறு

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!