General Tamil

6th Tamil Unit 8 Questions

41. உங்கள் அறம் செழிக்கட்டும். மக்களின் பசிநோய் ஒழியட்டும். இதோ! இப்போதே அமுதசுரபியில் நான் உணவை இடுகிறேன் – என்று மணிமேகலையிடம் கூறியது யார்?

A) ஆதிரை

B) அறவண அடிகள்

C) காயசண்டிகை

D) ஆபுத்திரன்

42. அன்பால் ஆட்சி செய்யும் அரசே! சிறைச்சாலையில் தண்டனை பெற்றுள்ளவர்கள் திருந்தி வாழ வழிகாண வேண்டும். சிறைக் கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும் – என்று மன்னரிடம் கூறியவர் யார்?

A) மணிமேகலை

B) அறவண அடிகள்

C) ஆதிரை

D) ஆபுத்திரன்

43. மாதவம் செய்தவளே! இந்த உலக மக்களின் பசிப்பிணி தீர்க்கும் பாங்குடைய அறத்தைச் செய்கிறாய். நான் உனக்குச் செய்ய வேண்டிய உதவி ஏதேனும் இருக்கிறதா? – என்று மன்னர் யாரிடம் வினவினார்?

A) ஆதிரை

B) அறவண அடிகள்

C) மணிமேகலை

D) ஆபுத்திரன்

44. வாழ்க்கைக்கு அறம் சொன்ன வள்ளுவர் வாழ்ந்த நாடு இது. புத்தர் பிறந்து அறம் போதித்த பூமி இது. எவை நன்மைகள் எவை தீமைகள் என்பவற்றை எல்லாம் தக்க அறிஞர்களைக் கொண்டு சிறையில் உள்ளவர்களுக்கு எடுத்துக் கூறவேண்டும். மேலும் அவர்களுக்குப் பெற்றோரை மதித்தல், முதியோரைப் பேணல், உறவினர்களை அரவணைத்தல் போன்றவற்றை வலியுறுத்தும் அறநெறிக் கல்வியை அளிக்க வேண்டும். இதுவே என் வேண்டுகோள் மன்னா! – என்று மன்னரிடம் கூறியவர் யார்?

A) ஆதிரை

B) அறவண அடிகள்

C) மணிமேகலை

D) ஆபுத்திரன்

45. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. கதை என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். கதையை

விரும்பாதவர் யாரும் இருக்க மாட்டார்கள்.

II. அதிலும் நம்ப

முடியாத கற்பனைகளைக் கொண்ட விந்தைக் கதைகள்

அனைவரையும் கவரும்.

III. கதையில் சிறந்த கருத்தும்

கூறப்படுமானால் அது சர்க்கரைப் பந்தலில் தேன்மழை

பொழிந்தது போல மேலும் சுவையாக இருக்கும்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி.

46. “பாதம்” – என்னும் சிறுகதை இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) மணல் வீடு, சி.சு.செல்லப்பா

B) தாவரங்களின் உரையாடல், எஸ்.ராமகிருஷ்ணன்

C) கனவு, ராஜம் கிருஷ்ணன்

D) இவர்களில் யாருமில்லை

47. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. எஸ்.ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்.

II. நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகள், சிறுவர் இலக்கியங்கள் என இவருடைய படைப்புகள் நீள்கின்றன.

III. உபபாண்டவம், கதாவிலாசம், தேசாந்திரி, கால் முளைத்த கதைகள் முதலிய ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) III மட்டும் சரி

48. ‘பாதம்’ என்னும் சிறுகதையில் மாரியிடம், விசித்திரமான காலணியை கொடுத்தது யார்?

A) சினிமா தியேட்டர் உரிமையாளர்

B) சிறுமி

C) தேநீர் கடைக்காரர்

D) வழிப்போக்கன்

49. ‘பாதம்’ என்னும் சிறுகதையில் மாரி செய்த தொழில் என்ன?

A) தேநீர் வியாபாரம்

B) கூலித்தொழில்

C) காலணி தைக்கும் தொழில்

D) இவற்றில் ஏதுமில்லை

50. மரம், பள்ளிக்கூடம், சித்திரை, கிளை, இனிப்பு, பாடுதல் ஆகிய சொற்களைக் கவனியுங்கள். இவை அனைத்தும் பெயரைக் குறிக்கின்றன. இவ்வாறு ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். பெயர்ச்சொல் ____________ வகைப்படும்.

A) 4

B) 5

C) 6

D) 7

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!