General TamilTnpsc

General Tamil Model Question Paper 12

91. “கம்பனைக் கற்கக் கற்க, கவிதையின்

சீரிய இயல்புகளை அறியலாம்” – இப்படிக் கூறியவர்

(அ) சி.வை.தாமோதரம் பிள்ளை

(ஆ) எஸ்.வையாபுரி பிள்ளை

(இ) ஆளுடைய பிள்ளை

(ஈ) “கம்பன் அடிப்பொடி” சா.கணேசனார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) எஸ்.வையாபுரி பிள்ளை

92. பம்மல் சம்மந்த முதலியார் எழுதாத நாடகம்

(அ) மனோகரா

(ஆ) சபாபதி

(இ) பவளக்கொடி

(ஈ) பொன்விலங்கு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பவளக்கொடி

பவளக்கொடி – சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய நாடகம்

93. திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்

(அ) கால்டுவெல்

(ஆ) ஜி.யூ.போப்

(இ) ஜோசப் பெஸ்கி

(ஈ) தெ.நொபிலி

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) ஜி.யூ.போப்

94. பொருத்துக:

நூல் ஆசிரியர்

(அ) ஆசாரக்கோவை – 1. கூடலூர்க்கிழார்

(ஆ) கார் நாற்பது – 2. விளம்பிநாகனார்

(இ) முதுமொழிகாஞ்சி – 3. கண்ணங்கூத்தனார்

(ஈ) நான்மணிக்கடிகை – 4. பெருவாயின் முள்ளியார்

அ ஆ இ ஈ

(அ) 3 1 2 4

(ஆ) 4 3 1 2

(இ) 3 2 4 1

(ஈ) 1 3 2 4

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) 4 3 1 2

95. பொருத்துக:

(அ) திருநாவுக்கரசர் – 1.எட்டாம் திருமுறை

(ஆ) சம்பந்தர் – 2. ஏழாம் திருமுறை

(இ) சுந்தரர் – 3. முதல் மூன்று திருமுறை

(ஈ) மாணிக்கவாசகர் – டி4. 4,5,6-ஆம் திருமுறைகள்

அ ஆ இ ஈ

(அ) 4 3 2 1

(ஆ) 1 2 3 4

(இ) 3 4 2 1

(ஈ) 2 1 4 3

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) 4 3 2 1

96. பொருந்தாத இணையைக் கண்டறி:

(அ) சிறுபஞ்சமூலம்-காரியாசன்

(ஆ) ஞானரதம்-கல்கி

(இ) எழுத்து-சி.சு.செல்லப்பா

(ஈ) குயில்பாட்டு-பாரதியார்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) ஞானரதம்-கல்கி

ஞானரதம்-பாரதியார் எழுதிய உரைநடை நூலாகும்

97. “தமிழ்ச் செய்யுட் கலம்பகம்” என்ற நூலைத் தொகுத்தவர்

(அ) வீரமாமுனிவர்

(ஆ) எல்லீஸ்

(இ) ஜி.யூ.போப்

(ஈ) கால்டுவெல்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) ஜி.யூ.போப்

98. தமிழ்ப் பேரகராதி – “லெக்சிகன்”(Lexicon) உருவாக்கியவர்

(அ) எஸ்.வையாபுரிப்பிள்ளை

(ஆ) வ.உ.சி

(இ) அ.சிதம்பரநாத செட்டியார்

(ஈ) வேங்கட ராஜீலு ரெட்டியார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) எஸ்.வையாபுரிப்பிள்ளை

99. தமிழிசைக்கருவி “யாழ்” பற்றி பலகாலம் ஆராய்ந்து “யாழ் நூல்” இயற்றியவர்

(அ) சண்முகானந்தர்

(ஆ) விபுலானந்தர்

(இ) தேஜானந்தர்

(ஈ) கஜானந்தர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) விபுலானந்தர்

சுவாமி விபுலானந்த சுவாமிகள் “யாழ்” என்ற இசைக்கருவி குறித்து 14 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து “யாழ்நூல்” என்ற நூலினை 1947-ஆம் ஆண்டு கரந்தை தமிழ்ச் சங்க ஆதரவுடன் திருக்கொள்ளக்புதூர் வில்வாரண்யேசுவரர் திருக்கோயிலில் அரங்கேற்றினார்.

100. பாரத சக்தி மகா காவியம் இயற்றியவர்

(அ) சேமசுந்தர பாரதியார்

(ஆ) சுத்தானந்த பாரதியார்

(இ) மகாகவி பாரதியார்

(ஈ) பாரதிதாசன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) சுத்தானந்த பாரதியார்

பாரத சக்தி மகாகாவியத்தை இயற்றியவர் சுத்தானந்த பாரதியார் ஆவார். இதன் முதற்பதிப்பு 1948-இல் வெளி வந்தது. இக்காவியம் 50,000 அடிகளால் ஆனது.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!