General TamilTnpsc

General Tamil Model Question Paper 12

61. அந்தந்த அடிகளில் உள்ள சொற்களை முன்பின்னாக மாற்றிக்கொள்வது-எவ்வகைப் பொருள்கோள்?

(அ) அடிமறி மாற்றுப் பொருள்கோள்

(ஆ) அளைமறியாப்புப் பொருள்கோள்

(இ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்

(ஈ) மொழிமாற்றுப் பொருள்கோள்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) மொழிமாற்றுப் பொருள்கோள்

மொழிமாற்றுப் பொருள்கோள்:

ஏற்ற பொருளுக்கு இயைபு மொழிகளை

மாற்றி ஓரடியுள் வழங்கல் மொழிமாற்றே

– நன்னூல்-413

கருதிய பொருளுக்குப் பொருந்திய மொழிகளை ஓரடியுள்ளே மாற்றிச் சொல்வதாகும்.

(எ.கா).”சுரையாழ அம்மி மிதப்ப” இதனை “சுரை மிதப்ப அம்மி ஆழ” எனப்பொருள் கொள்ள வேண்டும்

62. பொருள் தேர்க:

அங்காப்பு-என்பது

(அ) வாயைப் பிளத்தல்

(ஆ) அங்கம் காப்பு

(இ) அகம் காத்தல்

(ஈ) வாயைத் திறத்தல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) வாயைத் திறத்தல்

முதலெழுத்துகளின் முயற்சிப் பிறப்பு:

“முயற்சியுள் அ ஆ அங்காப்புடைய”

– நன்னூல் 76.

அங்காப்பு – வாயைத் திறத்தல்

63. வினைமுற்றைத் தேர்க:

(அ) படி

(ஆ) படித்த

(இ) படித்து

(ஈ) படித்தான்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) படித்தான்

படி-வேர்ச்சொல். படித்த-பெயரெச்சம். படித்து-வினையெச்சம். படித்தான்-வினைமுற்று

64. தவறான ஒன்றைத் தேர்க:

(அ) கிறு

(ஆ) கின்று

(இ) ஆ நின்று

(ஈ) இன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) இன்

கிறு, கின்று, ஆநின்று-நிகழ்கால இடைநிலைகள். இன்-இறந்தகால இடைநிலை

65. “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” எனப்பாடியவர்

(அ) பாரதியார்

(ஆ) சுரதா

(இ) பாரதிதாசன்

(ஈ) வாணிதாசன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) பாரதிதாசன்

66. இப்போதுள்ள கல்வெட்டுகளிலேயே மிகப் பழமையானது

(அ) உத்திரமேரூர்க் கல்வெட்டு

(ஆ) ஆதிச்சநல்லூர் கல்வெட்டு

(இ) அரியாங்குப்பம் கல்வெட்டு

(ஈ) திருநாதர் குன்றம் கல்வெட்டு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) திருநாதர் குன்றம் கல்வெட்டு

இப்போதுள்ள கல்வெட்டுகளிலேயே மிகப் பழமையானது செஞ்சிக்கு அடுத்துள்ள திருநாதர் குன்றில் காணப்படுகிறது. “மேற்கண்ட தகவல் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் எழுதிய “கல்வெட்டுகள்” என்று கட்டுரையில் காணப்படுகிறது.

67. காந்தியடிகளை “அரை நிர்வாணப் பக்கிரி” என ஏளனம் செய்தவர்

(அ) சர்ச்சில்

(ஆ) முசோலினி

(இ) ஹிட்லர்

(ஈ) ஸ்மட்ஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) சர்ச்சில்

68. “ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன” – இதனைப் பாடிய கவிஞர் யார்?

(அ) ந.பிச்சமூர்த்தி

(ஆ) வல்லிக்கண்ணன்

(இ) புதுமைப்பித்தன்

(ஈ) சி.சு.செல்லப்பா

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) வல்லிக்கண்ணன்

69. “கலம்பகம் பாடுவதில் புகழ் பெற்றவர்” யாவர்?

(அ) இரட்டையர்

(ஆ) சமணர்

(இ) பரணர்

(ஈ) பௌத்தர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) இரட்டையர்

திருவாமாத்தூர்க் கலம்பகம், தில்லைக் கலம்பகம், கச்சிக் கலம்பகம் போன்ற நூல்களை இயற்றியவர்கள் கலம்பகம் பாடுவதில் வல்லவர்களான இரட்டையர்கள் ஆவர். அவர்களின் பெயர் இளஞ்சூரியர்-முதுசூரியர் ஆவர். இவர்களது காலம் 14-ஆம் நூற்றாண்டு ஆகும். இவர்களில் ஒருவருக்கு பார்வை கிடையாது என்றும் மற்றொருவருக்கு கால்கள் கிடையாது என்றும் சொல்லப்படுகிறது. இவர்கள் சிலேடையாகப் பாடுவதிலும் வல்லவர்கள்.

70. “இந்திய அரசியலில் சாணக்கியர்” ———

(அ) ஜவஹர்லால் நேரு

(ஆ) வல்லபாய் படேல்

(இ) இராஜகோபாலச்சாரியார்

(ஈ) இராதா கிருட்டிணன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) இராஜகோபாலச்சாரியார்

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!