General TamilTnpsc

General Tamil Model Question Paper 12

31. “கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்—” – இவ் அடி மூலம் அனுமன் பெற்ற புகழ்ப்பெயர்

(அ) சொல்லின் நாயகன்

(ஆ) சொல்லின் தலைவன்

(இ) சொல்லின் புலவன்

(ஈ) சொல்லின் செல்வன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) சொல்லின் செல்வன்

32. “சிங்கங்களே! எழுந்து வாருங்கள், நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்” எனக் கூறியவர் – இவ்வடியைப் பாடியவர்.

(அ) பாரதிதாசன்

(ஆ) விவேகானந்தர்

(இ) சுபாஷ் சந்திரபோஸ்

(ஈ) திலகர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) விவேகானந்தர்

33. “சொல்லாதன இல்லை பொதுமறையான திருக்குறளில்” – இவ்வடியைப் பாடியவர்

(அ) பாரதியார்

(ஆ) பாரதிதாசன்

(இ) கவிமணி

(ஈ) சுரதா

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) பாரதிதாசன்

வெல்லாத தில்லை திருவள்ளு வன்வாய் விளைத்த வற்றுள்

பொல்லாத தில்லை புரை தீர்ந்த வாழ்வினிலே அழைத்துச்

சொல்லாத தில்லை பொதுமறை யான திருக்குறளில்

இல்லாத தில்லை இணையில்லை முப்பானுக்கிந் நிலத்தே

34. பொருத்தமான விடையை எழுதுக: “துன்பதையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்”

(அ) அந்தகக் கவி

(ஆ) இராமச்சந்திர கவிராயர்

(இ) திருவள்ளுவர்

(ஈ) உடுமலை நாராயணக்கவி

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) இராமச்சந்திர கவிராயர்

35. “களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே” – என்று கூறியவர்

(அ) ஒக்கூர் மாசாத்தியார்

(ஆ) பொன்முடியார்

(இ) காவற்பெண்டு

(ஈ) ஒளவையார்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) பொன்முடியார்

ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே:

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே:

வேல் வடித்துக் கொடுத்தல்

கொல்லற்குக் கடனே;

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே

ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி,

களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே. – புறநானூறு-312ஆவது பாடல். ஆசரியர்-பொன்முடியார்

36. அழுது அடியடைந்த அன்பர் ——

(அ) மாணிக்கவாசகர்

(ஆ) வாகீசர்

(இ) சரபேசர்

(ஈ) மதுரேசர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர், இறைவனை மெய்யுருகப் பாடிக் கசிந்து கண்ணீர் மல்கி அழுது தொழுதவர். அதனால் இவரை ‘அழுது அடியடைந்த அன்பர்” என்பர்.

37. மறைமறை அடிகள் தாம் நடத்தி வந்த “ஞானசாகரம்” இதழைத் தூய தமிழில் எங்ஙனம் பெயர் மாற்றம் செய்தார்?

(அ) ஞானக்கடல்

(ஆ) அறிவுக்கடல்

(இ) அறிவு சாகரம்

(ஈ) நாணக்கடல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) அறிவுக்கடல்

ஞானம்-அறிவு; சாகரம்-கடல் ஞானசாகரம்-அறிவுக்கடல். மறைமலையடிகள் தாம் நடத்தி வந்த ஞானசாகரம் என்ற திங்களிதழை அறிவுக்கடல் எனப் பெயர் மாற்றம் செய்தார். இந்த இதழ் 1902-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

38. “ஜல்லிக்கட்டு” என்னும் எருதாட்டத்தை வைத்து “வாடிவாசல்” எனும் நாவலை எழுதியவர் ———

(அ) சி.சு.செல்லப்பா

(ஆ) பி.எஸ்.ராமையா

(இ) திரு.வி.க

(ஈ) வ.வே.சு.ஐயர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) சி.சு.செல்லப்பா

“வாடிவாசல்” என்பது “ஜல்லிக்கட்டு” என்ற வீர விளையாட்டை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட குறுநாவலாகும். இந்நூலின் ஆசிரியர் சி.சு.செல்லப்பா ஆவார். இவர் “எழுத்து” என்ற பத்திரிகையை நடத்தியவராவார்.

39. திருமணம் செல்வக் கேசவராய முதலியார் தமிழின் எப்பிரிவுக்கு மிகவும் தொண்டு செய்தார்?

(அ) செய்யுள்

(ஆ) உரைநடை

(இ) இலக்கணம்

(ஈ) நாடகம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) உரைநடை

திருமணம் செல்வக் கேசவராயர் தமிழ் உரைநடைக்குப் பெரும் பங்காற்றியவர். இவர் “தமிழ் உரைநடைச்சிற்பி” என அழைக்கப்பட்டார்.

40. “தமிழ் உரைநடையின் தந்தை” என மெச்சத் தகுந்தவர்

(அ) யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர்

(ஆ) சி.வை.தாமோதரம் பிள்ளை

(இ) விபுலானந்த அடிகள்

(ஈ) கனகசபைப் புலவர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர்

தமிழ் உரைநடை வளர்ச்சிக்கும் பெரும் தொண்டாற்றிய ஆறுமுக நாவலரை, பரிதிமாற் கலைஞர் “வசனநடை கைவந்த வல்லாளர்” எனப் போற்றினார்

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!