General TamilTnpsc

General Tamil Model Question Paper 12

11. யாப்பு என்றால் ——- என்பது பொருள்

(அ) அடித்தல்

(ஆ) சிதைத்தல்

(இ) கட்டுதல்

(ஈ) துவைத்தல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) கட்டுதல்

யாப்பு – கட்டுதல்

12. நாயக்கர் மரபில் முடிசூட்டிக்கொண்ட பெண்ணரசி யார்?

(அ) மங்கையர்க்கரசி

(ஆ) ஜான்ஸிராணி

(இ) இராணி மங்கம்மாள்

(ஈ) தடாதகைப் பிராட்டியர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) இராணி மங்கம்மாள்

இராணி மங்கம்மாள்-நாயக்கர் மரபு.

மங்கையர்க்கரசி-பாண்டிய மரபு.

தடாதகைப் பிராட்டியார்-தெய்வ மரபு (மீனாட்சியம்மன்).

ஜான்ஸி ராணி-வடமத்தியப் பகுதியான ஜான்ஸி நாட்டு ராணி (இலட்சுமிபாய்)

13. “உலகின் எட்டாவது அதிசயம்” எனப் பாராட்டப்படுபவர்

(அ) நைட்டிங்கேல்

(ஆ) அன்னி சல்லிவான்

(இ) கெலன் கெல்லர்

(ஈ) பாலி தாம்சன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) கெலன் கெல்லர்

கெலன் கெல்லர் 19-ஆவது மாதக் குழந்தைப் பருவத்திலேயே கண், காது வாய் என்ற மூன்று புலன்களையும் இழந்து விட்டார். உலகிலேயே மாற்து திறனாளிகளில் முதல் பட்டம் பெற்றவர் இவரேயாவார். எனவே “உலகின் எட்டாவது அதிசயம் எனப் பாராட்டப் பெறுகிறார்.

14. திருக்குறளுக்கும் எந்த எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது?

(அ) 9

(ஆ) 7

(இ) 10

(ஈ) 133

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) 7

திருக்குறள் “ஏழு” சீர்களால் அமைந்த குறள் வெண்பாக்களை உடையது. “ஏழு” என்னும் எண்ணுப்பெயர் எட்டுக் குறட்பாக்களில் இடம் பெற்றுள்ளது. அதிகாரங்கள் 133🡪1+3+3=7. குறட்பாக்கள் 1330🡪1+3+3+0=7.

15. தொண்ணூற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் இடம் பெறும் நூல் எது?

(அ) குறிஞ்சிப்பாட்டு

(ஆ) முல்லைப்பாட்டு

(இ) கலிப்பாடல்

(ஈ) பரிபாடல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) குறிஞ்சிப்பாட்டு

குறிஞ்சிப்பாட்டு: பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது. இந்நூலில் செங்காந்தள் தொடங்கி மலை எருக்கம்பூ வரை 99 பூக்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

16. “மனித நாகரிகத்தின் தொட்டில்” என அழைக்கப்படுவது எது?

(அ) ஆப்பிரிக்கா

(ஆ) இலெமூரியா

(இ) சிந்து சமவெளி

(ஈ) ஹரப்பா

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) இலெமூரியா

கடல் கோளால் கொள்ளப்பட்ட பழந்தமிழ் குமரிக்கண்டமே இலெமூரியா கண்டமாகும். இது “மனித நாகரிகத்தின் தொட்டில்” என அழைக்கப்படுகிறது.

17. குமரகுருபரர் எழுதாத நூல்

(அ) கந்தர் கலிவெண்பா

(ஆ) மதுரைக்கலம்பகம்

(இ) திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்

(ஈ) நீதிநெறிவிளக்கம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்

திருச்செந்தூர் முருகுன் பிள்ளைத்தமிழ் – பகழிக் கூத்தரால் 15-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூலாகும்.

18. தாயுமானவர் நினைவு இல்லம் எந்த மாவட்டத்தில் உள்ளது?

(அ) தஞ்சாவூர்

(ஆ) நாகப்பட்டினம்

(இ) இராமநாதபுரம்

(ஈ) புதுக்கோட்டை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் “இலட்சுமிபுரம்” என்ற ஊரில் தாயுமானவர் நினைவு இல்லம் உள்ளது. அந்த இடத்தில்தான் அவர் இயற்கை எய்தினார்.

19. தமிழகத்தின் “வேர்ட்ஸ்வொர்த்” என்று புகழப்படுபவர்

(அ) வாணிதாசன்

(ஆ) வண்ணதாசன்

(இ) பாரதிதாசன்

(ஈ) சுப்புரத்தின் தாசன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) வாணிதாசன்

வாணிதாசனின் சிறப்புப் பெயர்கள்: கவிஞரேறு, பாவலர் மணி, தமிழகத்தின் “வேர்ட்ஸ்வொர்த்”

20. குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் ——- உயிர்வளிப்படலத்தைச் சிதைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.

(அ) குளோரோ ஃபுளுரோ கார்பன்

(ஆ) ஈத்தேன்

(இ) கதிரியக்கம்

(ஈ) மீத்தேன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) குளோரோ ஃபுளுரோ கார்பன்

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!