General TamilTnpsc

General Tamil Model Question Paper 12

51. வெற்பு, சிலம்பு, பொருப்பு – ஆகிய சொற்கள் குறிக்கும் பொருள்?

(அ) நிலம்

(ஆ) மலை

(இ) காடு

(ஈ) நாடு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) மலை

மலையைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள், வெற்பு, பொருப்பு, சிலம்பு, குறிச்சி, வடசொல்-கிரி

52. “நெடிலோ டுயிர்த் தொடர்க்குற் றுகரங்களுள்

டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே”

-இவ்விதிக்குச் சான்றைத் தேர்க:

(அ) இரட்டுற மொழிதல்

(ஆ) வட்டப்பலகை

(இ) கட்டுச்சோறு

(ஈ) காட்டுக்கோழி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) காட்டுக்கோழி

குற்றியலுகரப்புணர்ச்சி

நெடிலோ டுயிர்த் தொடர்க்குற் றுகரங்களுள்

டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே – நன்னூல் 183

“ட”கரம் (ட்) ஊர்ந்து வரும் நெடில் தொடர்க் குற்றியலுகரம், “ற”கரம் (ற்) ஊர்ந்து வரும் உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் வருமொழியோடு இணையும் போது அவை ஊர்ந்து வரும் ஒன்று இரட்டித்துப் புணரும்.

காடு + கோழி – காட்(ட்+உ)+கோழி = காட்டுக்கோழி.

ஆறு + பாலம் ஆற்(ற்+உ) + பாலம் = ஆற்றுப்பாலம்

கிணறு + தவளை = கிணற் (ற்+உ) + தவளை = கிணற்றுத் தவளை

53. “முந்நீர் வழக்கம் மகடூஉவோடில்லை” – இதில் மகடூஉ என்பது —–

(அ) மகள்

(ஆ) மகன்

(இ) பெண்

(ஈ) ஆண்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பெண்

மகடூஉ-பெண்

54. தொடை விகற்பம் எத்தனை வகைப்படும்?

(அ) 40

(ஆ) 35

(இ) 25

(ஈ) 45

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) 35

1.மோனைத்தொடை. 2.எதுகைத்தொடை. 3.முரண்தொடை. 4.இயைபுத்தொடை. 5.அளபெடைத்தொடை.

மேற்கண்ட 5 வகைத் தொடைகள் ஒவ்வொன்றிலும் 7 உட்பிரிவுகள் உள்ளன. 5 x 7 = 35. மொத்தம் 35 தொடை விகற்பங்கள் உள்ளன.

7 உட்பிரிவுகள்: இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று.

55. கீழ்க்கண்டவற்றுள் எது சரி?

(அ) தொகா, தொகை நிலைத் தொடர் 7

(ஆ) தொகை, தொகா நிலைத்தொடர் 9

(இ) தொகை நிலைத்தொடர் 6; தொகை நிலைத்தொடர் 9

(ஈ) தொகை நிலைத்தொடர் 9; தொகா நிலைத்தொடர் 6

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) தொகை நிலைத்தொடர் 6; தொகை நிலைத்தொடர் 9

தொகாநிலைத் தொடர் – 9

1.எழுவாய்த்தொடர். 2.விளித்தொடர். 3.வினைமுற்றுத்தொடர். 4.பெயரெச்சத்தொடர். 5.வினையெச்சத்தொடர். 6.வேற்றுமைத்தொடர். 7.இடைச்சொற்றொடர். 8.உரிச்சொற்றொடர். 9.அடுக்குத்தொடர்.

தொகைநிலைத்தொடர் – 6

1.வேற்றுமைத்தொகை. 2.வினைத்தொகை. 3.பண்புத்தொகை. 4.உவமைத்தொகை. 5.உம்மைத்தொகை. 6.அன்மொழித்தொகை

56. ஐ, ஒள ஆகிய 2 எழுத்துகளும் அழைக்கப்படும் விதம்

(அ) அளபெடை

(ஆ) எழுத்துப்பேறு

(இ) இதழ்குவி எழுத்து

(ஈ) சந்தியக்கரம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) சந்தியக்கரம்

போலி எழுத்து என்பது நன்னூல் கையாளும் ஓர் இலக்கணக் குறியீடு. இதனை “எழுத்துப்போலி” எனவும் குறிப்பிடுவர். தொல்காப்பியத்திலும் போலி பற்றிய குறிப்புகள் உள்ளன.

ஐயா-அய்யா; ஐயர்-அய்யர்; ஓளவை-அவ்வை.

வடமொழியில் இதனை “சந்தியக்கரம்” என்பர். சந்தியக்கரம் என்றால் கூட்டெழுத்துகளால் உருவாகும் எழுத்து என்று பொருளாகும்.

57. முற்றியலுகரச் சொல்லை எழுதுக:

(அ) மாடு

(ஆ) மூக்கு

(இ) கதவு

(ஈ) மார்பு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) கதவு

மாடு-நெடில் தொடர்க்குற்றியலுகரம், மார்பு-இடைத்தொடர்க்குற்றியலுகரம். மூக்கு-வன்தொடர்குற்றியலுகரம். கதவு-முற்றியலுகரம்.

58. கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் “ஒரு பொருட் பன்மொழிச்” சொல்லைத் தேர்க:

(அ) மீமிசை ஞாயிறு

(ஆ) உயர்ந்த கட்டடம்

(இ) மேல்பகுதி

(ஈ) மையப்பகுதி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) மீமிசை ஞாயிறு

ஒரே பொருளைத் தரும் வெவ்வேறான சொற்கள் தொடர்ந்து வருவது ஒரு பொருட்பன்மொழி ஆகும்.

(எ.கா) ஒரு தனி, ஓங்கி உயர்ந்த, மீமிசை

59. “பெறு” என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு:

(அ) பெற்றான்

(ஆ) பெறுவான்

(இ) பெறுகிறான்

(ஈ) பெறுபவன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) பெறுபவன்

பெறு-வேர்ச்சொல்.

பெற்றான்-இறந்தகால வினைமுற்று.

பெறுகிறான்-நிகழ்கால வினைமுற்று.

பெறுவான்-எதிர்கால வினைமுற்று.

பெறுபவன்-வினையாலணையும் பெயர்.

60. பொருத்துக:

(அ) இலக்கணமுடையது – 1. புறநகர்

(ஆ) மங்கலம் – 2. கால்கழுவி வந்தான்

(இ) இலக்கணப்போலி – 3. இறைவனடி சேர்ந்தார்

(ஈ) இடக்கரக்கல் – 4. நிலம்

அ ஆ இ ஈ

(அ) 2 3 1 4

(ஆ) 4 3 1 2

(இ) 1 2 3 4

(ஈ) 3 4 1 2

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) 4 3 1 2

இலக்கணமுடையது-நிலம்.

மங்கலம்-இறைவனடி சேர்ந்தார் (இறந்துவிட்டார் என்பது அமங்கலம்).

இலக்கணபோலி-புறநகர் (நகர்ப்புறம் என்பது இலக்கண-முடையது).

இடக்கரடக்கல்-கால் கழுவி வந்தான் (சபையில் கூற முடியாத தொடர்).

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!