General TamilTnpsc

General Tamil Model Question Paper 12

21. “திராவிடம்” என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர்

(அ) பெரியார்

(ஆ) குமரிலபட்டர்

(இ) கால்டுவெல்

(ஈ) ஜி.யூ.போப்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) குமரிலபட்டர்

“திராவிடம்” என்ற சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர் “குமரிலபட்டர்”. அதனைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தவர் “கால்டுவெல்”

22. “சீர்திருத்தக் காப்பியம்” என்று பாராட்டப்படுவது

(அ) சிலப்பதிகாரம்

(ஆ) மணிமேகலை

(இ) வளையாபதி

(ஈ) குண்டலகேசி

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) மணிமேகலை

23. ஏற்றுமதி, இறக்குமதி குறித்துக் கூறும் நூல்கள் யாவை?

(அ) நற்றிணை, கலித்தொகை

(ஆ) பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி

(இ) குறுந்தொகை, ஐங்குநுறூறு

(ஈ) பரிபாடல், மலைபடுகடாம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி

பழந்தமிழகத்தின் வணிகப் பொருள்கள் பற்றிய குறிப்புகள். பட்டினப்பாலையிலும், மதுரைக் காஞ்சியிலும் காணப்படுகின்றன. ஏற்றுமதியான பொருட்கள்: இரத்தினம், வைரம், மிளகு, கருங்காலி, கருமருது, தேக்கு, சந்தனம், வெண்துகில், அரிசி, ஏலக்காய், இலவங்கப்பட்டை, இஞ்சி முதலானவை.இறக்குமதியான பொருட்கள்: சீனத்துப் பட்டு, சர்க்கரை முதலானவை. அதியமானின் முன்னோர் காலத்தில் சீனாவிலிருந்து கரும்பு கொண்டு வரப்பட்டு பயிர் செய்யப்பட்டது.

24. சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரிசெய்த செய்தியைக் கூறும் நூல்

(அ) பெருங்கதை

(ஆ) குண்டலகேசி

(இ) நாககுமார காவியம்

(ஈ) மணிமேகலை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) மணிமேகலை

மணிமேகலையில், கதமதியின் தந்தையின் சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரி செய்த செய்தி கூறப்பட்டுள்ளது.

25.பொருத்துக:

(அ) நான்மணிமாலை – 1. கவிதை

(ஆ) மலரும் மாலையும் – 2. சிற்றிலக்கியம்

(இ) நான்மணிக்கடிகை – 3. காப்பியம்

(ஈ) தேம்பாவணி – 4. நீதிநூல்

அ ஆ இ ஈ

(அ) 2 1 4 3

(ஆ) 3 2 1 4

(இ) 2 3 1 4

(ஈ) 3 4 2 1

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) 2 1 4 3

நான்மணிமாலை-96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. மலரும் மாலையும்-கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை அவர்களின் கவிதை நூலாகும். நான்மணிக்கடிகை-பதினெண்கீழ்க்கணக்கிலுள்ள 11 நீதி நூல்களுள் ஒன்றாகும். தேம்பாவணி-காப்பிய வகை நூலாகும்.

26. “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை” – யார் கூற்று?

(அ) பாரதியார்

(ஆ) பாரதிதாசன்

(இ) கண்ணதாசன்

(ஈ) எதுவுமில்லை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) பாரதிதாசன்

27. கூடுகட்டி வாழும் பாம்பு எது?

(அ) நல்ல பாம்பு

(ஆ) இராஜ நாகம்

(இ) பச்சைப்பாம்பு

(ஈ) எதுவுமில்லை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) இராஜ நாகம்

இராஜநாகம்: இந்தியாவில் உள்ள இராஜநாகம் உலகிலேயே நஞ்சுமிக்க மிக நீளமான பாம்பாகும். 15 அடி நீளமுடையது. கூடுகட்டி வாழும் ஒரே வகைப்பாம்பு இது. இராஜநாகம், மற்றப் பாம்புகளையும் கூட உணவாக்கிக்கொள்ளும்.

28. மணிமேகலையில் விருச்சிக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் யார்?

(அ) சுதமதி

(ஆ) மணிமேகலை

(இ) ஆதிரை

(ஈ) காயசண்டிகை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) காயசண்டிகை

காயசண்டிகை பசிநோய் சாபம் பெற்றவள். அவள் சாபம் மணிமேகலையால் நீங்குகிறது. மணிமேகலையின் அட்சயப் பாத்திரத்தில் கற்புக்கரசியான ஆதிரை தான் முதன் முதலில் பிச்சையிட்டாள். ஆதிரையிடம் முதன்முதலில் பிச்சையேற்குமாறு மணிமேகலையிடம் காயசண்டிகைதான் கூறுகிறாள். மணிமேகலையின் தோழி கதமதி.

29. “தென்னிந்தியாவின் ஏதென்ஸ்” என்னும் புகழ்மிக்க நகரம்?

(அ) மதுரை

(ஆ) ஊட்டி

(இ) கொடைக்கானல் (ஈ) ஏற்காடு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) மதுரை

பழம் பெரும் தமிழர்தம் நாகரிகத் தொட்டிலாகத் திகழ்ந்ததால் மதுரை “தென்னிந்தியாவின் ஏதென்ஸ்” எனப்படுகிறது.

30. “சதகம்” என்பது ——— பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்.

(அ) ஐம்பது

(ஆ) நூறு

(இ) ஆயிரம்

(ஈ) பத்தாயிரம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) நூறு

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!