General TamilTnpsc

General Tamil Model Question Paper 12

71. ஆன்ம ஈடேற்றத்தை விரும்பும் பயணம் குறித்த நூல்

(அ) இரட்சணிய யாத்திரிகம்

(ஆ) இரட்சணிய மனோகரம்

(இ) இரட்சணிய குறள்

(ஈ) இரட்சணிய சரிதம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) இரட்சணிய யாத்திரிகம்

இரட்சணிய யாத்திரிகம் என்பதன் பொருள் உயிர், தன்னைக் காக்க வேண்டி, இறைவனை நோக்கிச் செல்லும் பயணம் என்பதாகும்.

72. “எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற திந்தவையம்” எனப் பொதுவுடைமையை விரும்பியவர்

(அ) கல்யாண சுந்தரம்

(ஆ) பாரதிதாசன்

(இ) முடியரசன்

(ஈ) தமிழ்ஒளி

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) பாரதிதாசன்

73. “திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூயமொழி தமிழ்ச் செம்மொழியாம்” – என்று செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்.

(அ) பரிதிமாற் கலைஞர்

(ஆ) நாமக்கல் கவிஞர்

(இ) பாரதியார்

(ஈ) பாரதிதாசன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) பரிதிமாற் கலைஞர்

74. ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் யாரால் இயற்றப்பட்டன?

(அ) சைவரால் இயற்றப்பட்டன

(ஆ) வைணவரால் இயற்றப்பட்டன

(இ) சமணரால் இயற்றப்பட்டன

(ஈ) கிறித்தவர்களால் இயற்றப்பட்டன

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) சமணரால் இயற்றப்பட்டன

ஐஞ்சிறு காப்பியங்கள்

சூளாமணி-தோலாமொழித்தேவர்.

நீலகேசி-ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.

உதயணகுமார காவியம்-ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.

நாககுமார காவியம்-ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.

யசோதர காவியம்- ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.

ஐந்து காப்பியங்களும் சமண சமயச் சார்புடையவை.

75. பெர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளை ஏற்று பைபிளைத் தமிழில் பெயர்த்த அறிஞர்

(அ) வேதநாயகம் பிள்ளை

(ஆ) வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

(இ) பேராசிரியர் சுந்தரம் பிள்ளை

(ஈ) ஆறுமுக நாவலர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) ஆறுமுக நாவலர்

ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்தில் “மெதடிஸ்த” என்ற ஆங்கில பாடசாலையில் படித்தார். தனது 19-வது வயதில் அப்பள்ளியிலேயே ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அப்பாடசாலையின் நிறுவனராகவும், முதல்வராகவும் இருந்த பெர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளை ஏற்று விவிலியத்தைத் தமிழில் மொழி பெயர்த்தார்.

76. இதழ், நா, பல், அண்ணம் – இவை

(அ) ஒலி பிறப்புகள்

(ஆ) ஒலிப்பு முறைகள்

(இ) ஒலிப்பான்கள்

(ஈ)ஒலிப்பு முனைகள்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ)ஒலிப்பு முனைகள்

77. “ஸ்ரீவைஷ்ணவத்தின் வளர்ப்புத் தாய்” எனப் போற்றப்படுபவர்

(அ) ஆண்டாள்

(ஆ) பேயாழ்வார்

(இ) பெரியாழ்வார்

(ஈ) இராமானுஜர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) இராமானுஜர்

78. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பது ——- நூலின் புகழ்மிக்க தொடர்

(அ) திருமந்திரம்

(ஆ) திருவாசகம்

(இ) திருக்குறள்

(ஈ) தேம்பாவணி

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) திருமந்திரம்

79. மருத நிலத்திற்குரிய தெய்வம்

(அ) இந்திரன்

(ஆ) முருகன்

(இ) திருமால்

(ஈ) வருணன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) இந்திரன்

நிலம் தெய்வம்

மருதம் இந்திரன்

குறிஞ்சி முருகன்

முல்லை திருமால்

நெய்தல் வருணன்

80. “தாண்டக வேந்தர்” என அழைக்கப்படுபவர் யார்?

(அ) சுந்தரர்

(ஆ) திருநாவுக்கரசர்

(இ) மாணிக்க வாசகர்

(ஈ) திருஞான சம்பந்தர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) திருநாவுக்கரசர்

“தாண்டகம்” என்ற விருத்த வகையை பாடியமையால் திருநாவுக்கரசர் “தாண்டகவேந்தர்” எனும் பெயர் பெற்றார்.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!