General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 17

91. பின்வருவனவற்றுள் “கடலை”க் குறிக்காத சொல்

(அ) ஆர்கலி

(ஆ) முந்நீர்

(இ) பௌவம்

(ஈ) திமில்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) திமில்

கடலைக் குறிக்கும் சொற்கள்: ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பௌம், பரவை, புணரி.

கலத்தைக் குறிக்கும் சொற்கள்: கப்பல், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புனை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மிதவை, பஃறி, ஓடம்.

92. மு.மேத்தா எழுதாத நூல் எது?

(அ) கண்ணீர் பூக்கள்

(ஆ) நடந்த நாடகம்

(இ) ஊர்வலம்

(ஈ) தண்ணீர் தேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) தண்ணீர் தேசம்

“தண்ணீர் தேசம்” என்பது கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதை நாவலாகும்.

93. 1876, 2003 ஆகிய ஆண்டுகளில் —— என்னுமிடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

(அ) திருவண்ணாமலை

(ஆ) தருமபுரி

(இ) ஆதிச்சநல்லூர்

(ஈ) கீழார் வெளி

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) ஆதிச்சநல்லூர்

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 1876, 2003 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

94. கிழிசல்-சிறுகதை ஆசிரியர்

(அ) ஜெயகாந்தன்

(ஆ) ராஜம் கிருஷ்ணன்

(இ) வண்ணதாசன்

(ஈ) நாஞ்சில் நாடன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) நாஞ்சில் நாடன்

95. “நோய்க்கு மருந்து இலக்கியம்” எனக் கூறியவர்

(அ) உ. வே.சாமிநாதர்

(ஆ) திரு.வி.கல்யாணசுந்தரனார்

(இ) மீனாட்சி சுந்தரனார்

(ஈ) பரிதிமாற் கலைஞர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) மீனாட்சி சுந்தரனார்

96. பெற்றோரைக் குறிக்கும் “அம்மை, அப்பன்” என்னும் சொற்கள் எப்பகுதியைச் சார்ந்தது?

(அ) குட்ட நாடு

(ஆ) பன்றி நாடு

(இ) நாஞ்சில் நாடு

(ஈ) அருவா நாடு

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) நாஞ்சில் நாடு

97. “திரைக்கவித் திலகம்” என்றழைக்கப்படுபவர் யார்?

(அ) பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

(ஆ) மருதகாசி

(இ) உடுமலை நாராயணகவி

(ஈ) சுரதா

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) மருதகாசி

98. “வேங்கடமகாலிங்கம்” என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் யார்?

(அ) ஞானக்கூத்தன்

(ஆ) கல்யாண்ஜி

(இ) பசுவய்யா

(ஈ) பிச்சமூர்த்தி

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) பிச்சமூர்த்தி

இயற்பெயர் புனைப்பெயர்

ந.வேங்கடமகாலிங்கம் பிச்சமூர்த்தி

அரங்கநாதன் ஞானக்கூத்தன்

சி.கல்யாணசுந்தரம் கல்யாண்ஜி, வண்ணதாசன்

சுந்தர ராமசாமி பசுவய்யா

99. மகாவித்துவான் நவநீதக்கிருட்டிண பாரதியாரின் மாணவர்

(அ) பாரதிதாசன்

(ஆ) சச்சிதானந்தன்

(இ) தமிழன்பன்

(ஈ) காமராசன்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) சச்சிதானந்தன்

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பருத்தித் துறையைச் சேர்ந்தவர் கவிஞர் க.சச்சிதானந்தன். இவருடைய ஆசிரியரின் பெயர் மகாவித்துவான் நவநீதக் கிருட்டிண பாரதியார்

100. அம்பேத்கர் மக்கள் கழகத்தைத் தோற்றுவித்த ஆண்டு

(அ) 1948

(ஆ) 1945

(இ) 1946

(ஈ) 1940

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) 1946

அம்பேத்கர் 1946-ல் மக்கள் கல்விக்கழகத்தைத் தோற்றுவித்தார். மும்பையில் இவரது அரிய முயற்சியால் உருவான சித்தார்த்தா உயர் கல்வி நிலையத்தில் இன்றைய அறிவு வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!