General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 17

71. “வருகைப்பருவம்” என்பது பிள்ளைத்தமிழின் எத்தனையாவது பருவம்?

(அ) முதல் பருவம்

(ஆ) ஐந்தாம் பருவம்

(இ) ஆறாவது பருவம்

(ஈ) மூன்றாம் பருவம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) ஆறாவது பருவம்

பிள்ளைத் தமிழின் பருவங்கள்:

இருபாலருக்கும் பொதுவானவை: 1.காப்பு, 2.செங்கீரை. 3.தால், 4.சப்பாணி, 5.முத்தம், 6.வருகை, 7.அம்புலி.

ஆண்பால்: 8.சிற்றில், 9.சிறுபறை, 10.சிறுதேர்.

பெண்பால்: 8.அம்மானை, 9.கழங்கு, 10.ஊசல்

72. குமரகுருபரர் எழுதாத நூல் எது?

(அ) கந்தர்கலி வெண்பா

(ஆ) குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்

(இ) மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்

(ஈ) முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்

குலோத்துங்கள் பிள்ளைத் தமிழ் என்ற நூலை இயற்றியவர் ஒட்டக்கூத்தர் ஆவார்.

73. “பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ” எனச் சேக்கிழாரைப் புகழ்ந்துரைத்தவர்

(அ) பாரதியார்

(ஆ) பாரதிதாசன்

(இ) திரு.வி.க

(ஈ) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

பெரியபுராணத்தை இயற்றியவர் சேக்கிழார். அவரை “பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ” என மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாராட்டியுள்ளார்

74. “நற்றிணையைத்” தொகுப்பித்தவர்

(அ) உக்கிரப் பெருவழுதி

(ஆ) இளம்பெருவழுதி

(இ) பன்னாடு தந்த மாறன் வழுதி

(ஈ) மிளைகிழான் நல்வேட்டனார்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) பன்னாடு தந்த மாறன் வழுதி

நற்றிணை, எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இந்நூலில் 275 புலவர்கள் பாடிய 400 செய்யுள்கள் உள்ளன. இந்நூலைத் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த மாறன் வழுதி ஆவார்.

75. தமிழுக்குக் “கதி” என்று பெரியோரால் போற்றப்படும் இரு நூல்கள்

(அ) திருக்குறள், நாலடியார்

(ஆ) திருக்குறள், கம்பராமாயணம்

(இ) திருக்குறள், நான்மணிக்கடிகை

(ஈ) திருக்குறள், சிலப்பதிகாரம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) திருக்குறள், கம்பராமாயணம்

“தமிழுக்குக் கதி”என்று போற்றப்படும் இரண்டு நூல்கள் கம்பராமாயணம் மற்றும் திருக்குறள் ஆகும் என்று கூறியவர் செல்வ கேசவராய முதலியார் ஆவார்.

76. தலைவி தன் தலைவனோடு கொண்ட நட்பு, நிலத்தைவிடப் பெரியது” – என்று கூறும் நூல்

(அ) நற்றிணை

(ஆ) குறுந்தொகை

(இ) கலித்தொகை

(ஈ) அகநானூறு

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) குறுந்தொகை

குறுந்தொகை

“நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரள வின்றே சாரல்

கடுங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே”

– தேவகுலத்தார்.

பொருள்: மலைப் பகுதியிலுள்ள குறிஞ்சியின் கரிய கொம்புகளில் குறிஞ்சிப் பூக்கள் பூத்திருக்கின்றன. அப்பூக்களிலிருந்து வண்டுகள் தேனைத் திரட்டுவதற்கு இடமாகிய நாட்டை உடைய தலைவனோடு “யான் கொண்ட நட்பானது நிலத்தை விடப் பெரியது; வானத்தை விட உயர்ந்தது; கடலை விட ஆழமானது” என்று தலைவி கூறுகிறாள்.

77. கம்பரால் “பண்ணவன்” எனக் குறிப்பிடப்படுபவர் யார்?

(அ) இராமன்

(ஆ) இலக்குவன்

(இ) குகன்

(ஈ) பரதன்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) இலக்குவன்

கம்பராமாயணம்-அயோத்தியாக் காண்டம் – குகப்படலம்

“அண்ணலும் விரும்பி எம்பால் அழைத்திநீ அவனை என்றான்

பண்ணவன் வருக என்னப் பரிவினன் விரைவில் புக்கான்”

– கம்பர்.

பொருள்: இராமன் விருப்பத்துடன் “அன்னவனை என்னிடம் அழைத்து வருவாய்” என்றான்.

இலக்குவன் குகனை “வருக” என்றவுடன் குகன் விரைந்து வந்து இராமனைத் தன் கண்களால் கண்டு களித்தான்.

78. பெருமாள் திருமொழியில் உள்ள பாசுரங்களின் எண்ணிக்கை எத்தனை?

(அ) 205

(ஆ) 305

(இ) 105

(ஈ) 405

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) 105

பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் குலசேகர ஆழ்வார். இவர் அருளிய பெருமாள் திருமொழி” நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் முதலாயிரத்தில் அமைந்துள்ளது. இந்நூலில் 105 பாசுரங்கள் உள்ளன.

79. “மதியிலி அரசர்நின் மலரடி பணிகிலர் வானகம் ஆள்வாரே” – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

(அ) நற்றிணை

(ஆ) அகநானூறு

(இ) புறநானூறு

(ஈ) நந்திக்கலம்பகம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) நந்திக்கலம்பகம்

நந்திக்கலம்பகம்

“நிதிதரு கவிகையும் நிலமகள் உரிமையும் இவையிவை யுடை நந்தி

மதியிலி அரசர்நின் மலரடி பணிகிலர் வானகம் ஆள்வாரே”

பொருள்: சல்வத்தைத் தருகின்ற குடையும், நிலமகள் உரிமையும் ஆகியவற்றை உடைய நந்தி மன்னனே! அறிவில்லாதவரான அரசர், உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளை வணங்காதவராகித் தேவர் உலகத்தை ஆள்பவராவார்.

கருத்து: “நந்தி மன்னனின் காலடிகளை வணங்காத அரசர்கள் வானுலகத்திற்குச் சென்றுவிடுவர்” என்பதாகும்.

80. கம்பராமாயணம் – அயோத்தியா காண்டத்திலுள்ள படலங்கள்

(அ) 14

(ஆ) 10

(இ) 11

(ஈ) 13

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) 13

கம்பராமாயணம்:

பாலகாண்டம்-24 படலங்கள்.

அயோத்தியா காண்டம்-13 படலங்கள்.

ஆரண்ய காண்டம்-13 படலங்கள்.

கிட்கிந்தா காண்டம்-17 படலங்கள்.

சுந்தர காண்டம்-14 படலங்கள்.

யுத்த காண்டம்-42 படலங்கள்.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!