General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 17

11. உரிய பொருளைக்கண்டறிக:

“ஆ” உணர்த்தும் பொருள் யாது?

(அ) அருள்

(ஆ) பசு

(இ) நெருப்பு

(ஈ) வனப்பு

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) பசு

ஓரெழுத்து ஒரு மொழியில்.

ஆ-பசு, கோ-பசு, தே-அருள், தீ-நெருப்பு, பா-அழகு அல்லது வனப்பு.

12. பிறமொழிக் கலப்பற்றத் தொடரை எழுதுக:

(அ) நமஸ்காரம் என்று சாஷ்டாங்கமாக விழுந்தவனை வாழ்த்தினேன்.

(ஆ) நமஸ்காரம் என்று சாஷ்டாங்கமாக விழுந்தவனை ஆசிர்வதித்தேன்.

(இ) வணக்கம் என்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்தவனை வாழ்த்தினேன்

(ஈ) வணக்கம் என்று நெஞ்சாண்கிடையாக விழுந்தவனை ஆசிர்வதித்தேன்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) வணக்கம் என்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்தவனை வாழ்த்தினேன்

நமஸ்காரம்-வணக்கம்.

சாஷ்டாங்கம்-நெடுஞ்சாண்கிடை.

13. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

(அ) நுனித்து – நுனி+த்+உ

(ஆ) நுனித்து – நுனி+த்+த்+உ

(இ) நுனித்து – நுனித்து+உ

(ஈ) நுனித்து – நுனித்+த்+உ

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) நுனித்து – நுனி+த்+த்+உ

நுனித்து – நுனி+த்+த்உ.

நுனி – பகுதி: த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, உ – வினையெச்ச விகுதி

14. கீழ்க்காணும் தொடர்களில் பிழையான தொடரைக் கண்டறிக:

(அ) பேருந்து நிறுத்துமிடத்தில் பள்ளிக்கூடம் இருக்கிறது

(ஆ) இன்றும் நம் நாட்டில் பெருவாரியான மக்கள் உள்ளார்களே.

(இ) ஆளமரத்தின் விளுதினைப் பாம்பென்று குறங்கு அஞ்சியது

(ஈ) ஏரிகளில் மழைநீர் சேமித்தால் கிணறுகளில் நீர் வற்றாது.

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) ஆளமரத்தின் விளுதினைப் பாம்பென்று குறங்கு அஞ்சியது

ஆலமரத்தின் விழுதினைப் பாம்பென்று குரங்கு அஞ்சியது.

15. பொருந்தாததைக் கண்டறிக:

(அ) தான்+இன் – தன்னின்

(ஆ) நீ+இன் – உன்னின்

(இ) யான்+இன் – என்னின்

(ஈ) நாம்+இன் – எங்களின்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) நாம்+இன் – எங்களின்

நாம்+இன் – நம்மின்

16. ஓடு – என்பதன் வினையெச்சச் சொல்லைக் கண்டறிக:

(அ) ஓடி

(ஆ) ஓடிய

(இ) ஓடினான்

(ஈ) ஓடுதல்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) ஓடி

ஓடு – வேர்ச்சொல்; ஓடி – வினையெச்சம், ஓடிய – பெயரெச்சம், ஓடினான் – வினைமுற்று, ஓடுதல் – தொழிற்பெயர்.

ஓர் எச்சச் சொல்லை அடுத்து வினைச்சொல் வருமாயின் அது வினையெச்சம் ஆகும்.

எ.கா: ஓடி வந்தான், ஓடிப் போனான், ஓடிச் சென்றான். ஓர் எச்சச் சொல்லை அடுத்து பெயர்ச்சொல் வருமாயின் அது பெயரெச்சம் ஆகும். ஒடிய குதிரை, ஓடிய பையன், ஓடிய மக்கள்.

17. தொடர்நிலைச் செய்யுளும், தூய காப்பியங்களும் இயற்றுபவர்

(அ) ஆசுகவி

(ஆ) வித்தாரக் கவி

(இ) மதுர கவி

(ஈ) சித்திரக்கவி

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) வித்தாரக் கவி

ஆசுகவி – “பாடு” எனக் கூறியவுடன் பாடுபவர்.

மதுரகவி – செவிக்கினிய ஓசை நலம் சிறக்கப் பாடுபவர்.

சித்திரக்கவி – சொல்லணி அமைத்துச் சுவை வளம் செழிக்கப் பாடுபவர்.

வித்தாரக்கவி – தொடர்நிலைச் செய்யுளும் தூய காப்பியங்களும் இயற்றுபவர்.

18. கம்பரது காலம்

(அ) கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு

(ஆ) கி.பி.ஓன்பதாம் நூற்றாண்டு

(இ) கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு

(ஈ) கி.பி. எட்டாம் நூற்றாண்டு

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு

கம்பரது காலம் 12-ஆம் நூற்றாண்டாகும். இவரது சமகாலப் புலவர்கள் ஒட்டக்கூத்தர், ஜெயங்கொண்டார் மற்றும் புகழேந்தி ஆவர். கம்பர் இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் அவைப் புலவராக விளங்கினார். அதனால் காலத்தை தெளிவாக அறிய முடிகிறது

19. சொல்லிற்கு ஏற்ற பொருளைப் பொருத்தி எழுதுக:

அ. ஆய காலை – 1. திரட்சி

ஆ. திரள் – 2. வேடர்

இ. எயினர் – 3. படகு

ஈ. நாவாய் – 4. அந்த நேரத்தில்

அ ஆ இ ஈ

அ. 4 2 1 3

ஆ. 4 1 2 3

இ. 2 4 1 3

ஈ. 3 2 1 4

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 4 1 2 3

20. “உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்” – என வழங்கப்படும் நூல்

(அ) கம்பராமாயணம்

(ஆ) சிலப்பதிகாரம்

(இ) பெரியபுராணம்

(ஈ) மணிமேகலை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரத்தில் பாடல்களின் இடையிடையே உரைநடையும் அமைந்திருப்பதால், “உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்” என வழங்கப் பெற்றது.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!