General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 17

61. “பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்” என்பதில் “பொறை” என்ற சொல் குறிப்பிடும் பண்பு

(அ) கோபம்

(ஆ) அன்பு

(இ) மகிழ்ச்சி

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) பொறுமை

62. “நீண்ட வால்நிலம் புடைத்திடக்கிடந்துடல் நிமிர்ந்து” – இதில் நிமிர்ந்து என்ற சொல்லின் எதிர்ச்சொல்லைக் கண்டறிக.

(அ) உயர்ந்து

(ஆ) குனிந்து

(இ) பறந்து

(ஈ) வளர்ந்து

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) குனிந்து

63. பொருத்துக:

அ. பொங்குகடல் – 1. உருவகம்

ஆ. அடைந்து – 2. இடவாகுபெயர்

இ. கரகமலம் – 3. வினைத்தொகை

ஈ. தேசம் – 4. வினையெச்சம்

அ ஆ இ ஈ

அ. 3 4 1 2

ஆ. 3 1 4 2

இ. 2 1 4 3

ஈ. 4 2 1 3

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. 3 4 1 2

64. “தேன் போன்ற மொழி” இத்தொடரில் வரும் உவமை வகை

(அ) தொகையுவமை

(ஆ) விரியுவமை

(இ) வகையுவமை

(ஈ) அழகுவமை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) விரியுவமை

உவமை, உவமேயம் ஆகிய இரண்டையும் பொருத்துகின்ற உவம உருபு வெளிப்படையாக வருவது விரியுவமையாகும்.

எ.கா:தேன் போன்ற மொழி. “போன்ற” என்ற உவம உருபு வெளிப்பட வந்துள்ளதால் இது விரியுவமையாகும்.

65. “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” எனப் பாடியவர் யார்?

(அ) பாரதியார்

(ஆ) சுரதா

(இ) பாரதிதாசன்

(ஈ) கண்ணதாசன்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) பாரதிதாசன்

வெல்லாத தில்லை திருவள்ளு வன்வாய் விளைத்தவற்றுள்

பொல்லாத தில்லை புரைதீர்ந்த வாழ்வினிலே அழைத்துச்

சொல்லாத தில்லை பொதுமறை யான திருக்குறளில்

இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக்கிந் நிலத்தே

– பாரதிதாசன்

66. “கதம்” என்ற சொல்லின் பொருள்

(அ) சினம்

(ஆ) சீதனம்

(இ) இசை

(ஈ) அளவு

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) சினம்

67. “வதுவை” என்ற சொல்லின் பொருள்

(அ) திருமணம்

(ஆ) மறுமணம்

(இ) நறுமணம்

(ஈ) மணம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) திருமணம்

68. “கவரி வீசிய சேர மன்னன்”

(அ) சேரன் கணைக்கால் இரும்பொறை

(ஆ) பெருஞ்சேரலாதன்

(இ) சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை

(ஈ) ஆடுகோட்பாட்டு சேரலாதன்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை

தென்பாண்டி நாட்டிலுள்ள “மோசி” என்னும் ஊரில் வாழ்ந்தவர். “கீரன்” என்னும் புலவராவர். இவர் மோசிகீரனார் என அழைக்கப்பட்டார். இவரின் பாடல்கள் புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை முதலிய சங்கத் தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன.

ஒருமுறை இவர் சேரமன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்டு பாடிப் பரிசுகள் பெறச் சென்றார். பயணக் களைப்பில் அவர் அங்கிருந்த முரசுக்கட்டிலில் படுத்து உறங்கிவிட்டார். அதைக்கண்டு சிறிதும் கோபம் கொள்ளாது சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை புலவருக்கு கவரி வீசினார்

69. இரட்சணிய யாத்திரிகம் – என்பதன் பொருள்

(அ) இறைவனின் பயணம்

(ஆ) இறைவனை நோக்கிச் செல்லும் பயணம்

(இ) அடியார்களின் பயணம்

(ஈ) சிறிஸ்துவத்தை நோக்கிய பயணம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) இறைவனை நோக்கிச் செல்லும் பயணம்

இரட்சணிய யாத்திரிகம் என்பதன் பொருள் உயிர் தன்னை காக்க வேண்டி, இறைவனை நோக்கிச் செல்லும் பயணம் என்பதாகும்.

70. பொருந்தாதது எது?

(இ) அயோத்தியா காண்டம்

(ஆ) ஹிஜ்ரத்துக்காண்டம்

(இ) பால காண்டம்

(ஈ) கிட்கிந்தா காண்டம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) ஹிஜ்ரத்துக்காண்டம்

அயோத்தியா காண்டம், பால காண்டம், கிட்கிந்தா காண்டம் ஆகிய மூன்றும் கம்பராமாயணத்தின் பெரும் பிரிவுகளாகும்.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!