General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 17

41. கல்வெட்டுகளில் காணப்படும் மதிரை இன்று —————ஆக மாறியுள்ளது.

(அ) கோவை

(ஆ) புதுவை

(இ) மதுரை

(ஈ) தில்லை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) மதுரை

மருத மரங்கள் அடர்ந்த பகுதியாக இருந்தமையால் “மருதை” என வழங்கப்பட்டு காலப்போக்கில் “மதுரை” என்றானது என்கின்றனர். கல்வெட்டுகளில் “மதிரை” என்று காணப்படுகிறது.

42. “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி” என்று கூறியவர்

(அ) சேக்கிழார்

(ஆ) திருவள்ளுவர்

(இ) கம்பர்

(ஈ) ஒளவை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) ஒளவை

“அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகழ்டிக்

குறுகத் தரித்த குறள்” என்று ஒளவையார் திருக்குறளைப் பாராட்டி திருவள்ளுவமாலையில் (பாடல் எண்:55) பாடியுள்ளார்

43. “அரை நிர்வாணப் பக்கிரி” என காந்தியடிகளை ஏளனம் செய்தவர்

(அ) தால்சுதாய்

(ஆ) ஸ்மர்ட்ஸ்

(இ) சர்ச்சில்

(ஈ) அபுல்காசிம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) சர்ச்சில்

காந்தியடிகள் தமிழகத் வந்தபோது, ஏழை உழவர்கள் வறுமையால் அரையாடை உடுத்தியதைக் கண்டார். தாமும் அன்று முதல் மேலாடை அணிவதை நிறுத்திக் கொண்டார். அரையாடையுடன் இங்கிலாந்தில் நடந்த வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற போது, அப்போதைய இங்கிலாந்தின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் காந்தியடிகளை “அரை நிர்வாணப்பக்கிரி” என்று ஏளனம் செய்தார்.

44. “ஒருவருக்கொருநாட்டுக் குரிய தான

ஓட்டைச் சாண் நினைப்புடையவர் அல்லர்” – யார்?

(அ) கவிமணி

(ஆ) கண்ணதாசன்

(இ) பாரதிதாசன்

(ஈ) பாரதியார்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) பாரதிதாசன்

மகாகவி

“பாரதியார் உலககவி! அகத்தில் அன்பும்

பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர்

ஒரூருக் ககொருநாட்டுக்குரிய தான

ஓட்டைச் சாண் நினைப்புடையர் அல்லர்”

என்று பாரதியாரைப் புகழ்ந்து “மகாகவி” என்ற தலைப்பில் பாரதிதாசன் எழுதிய பாடலாகும்.

45. தமிழர்கள் ——— நாட்டுடன் கடல் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.

(அ) ஆஸ்திரியா

(ஆ) கனடா

(இ) போர்ச்சுக்கல்

(ஈ) சாவக நாடு

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) சாவக நாடு

தமிழர்கள் சாவக நாட்டுடன் கடல் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். மேலும் கிரேக்கம், உரோமாபுரி, எகிப்து ஆகிய நாடுகளுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.

46. “கீழார் வெளி” – கடல் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட கட்டட இடிபாடுகள் ——— நூற்றாண்டைச் சார்ந்தவை.

(அ) கி.மு.முதல் நூற்றாண்டு

(ஆ) கி.மு.இரண்டாம் நூற்றாண்டு

(இ) கி.மு.மூன்றாம் நூற்றாண்டு

(ஈ) கி.மு.நான்காம் நூற்றாண்டு

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) கி.மு.மூன்றாம் நூற்றாண்டு

1963-ம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறை, பூம்புகார் அருகிலுள்ள கீழார் வெளி என்ற இடத்தில் மேற்கொண்ட கடல் அகழ்வாய்வின் போது கி.மு.3-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டட இடிபாடுகள் கண்டறியப்பட்டன. இந்த ஆய்வில் செங்கற்களால் கட்டப்பட்ட படகுத்துறை, நீர்த்தேக்கம், புத்தவிஹாரம், வெண்கலத்தலான புத்தர் பாதம் முதலிய எச்சங்கள் கிடைத்தன.

47. தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்கள் மூலம் உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கப் பாடுபட்டவர் யார்?

(அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்

(ஆ) ஆலந்தூர் மோகனரங்கன்

(இ) ஈரோடு தமிழன்பன்

(ஈ) அப்துல் ரகுமான்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் துரை மாணிக்கம். இவரது காலம் 1933 முதல் 1995 வரை ஆகும். தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்கள் மூலம் உலகத் தமிழரிடையே தமிழுணர்வை வளர்த்தவர். இவர் பாரதிதாசனின் தலை மாணாக்கர். இவர் இயற்றிய நூல்கள் கனிச்சாறு, ஐயை, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, பள்ளிப்பறவைகள், நூறாசிரியர் முதலியனவாகும்.

48. பொருத்துக:

அ. தேங்காய்த் துண்டுகள் -1.நீல.பத்மநாபன்

ஆ. மண்ணின் மகன் – 2. சுந்தர ராமசாமி

இ. செங்கமலமும் ஒரு சோப்பும் – 3. சிவசங்கரி

ஈ. விழிப்பு – 4. டாக்டர்.மு.வ.

அ ஆ இ ஈ

அ. 4 1 2 3

ஆ. 2 4 3 1

இ. 3 1 4 2

ஈ. 1 3 2 4

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. 4 1 2 3

49. ஓவியருக்கு, “நோக்கினார் கண்ணிடத்தே

தம் தொழில் நிறுத்துவோர்” என இலக்கணம் வகுத்தவர்

(அ) நச்சினார்க்கினியர்

(ஆ) இளம்பூரணார்

(இ) சேனாவரையர்

(ஈ) பரிமேலழகர்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) நச்சினார்க்கினியர்

நச்சினார்க்கினியர் தம் உரைநூலில் ஓவியருக்கான இலக்கணமாக “நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்” என்று கூறியுள்ளார்.

50. சி.வை.தாமோதரனார் பரிதிமாற் கலைஞருக்கு வழங்கிய சிறப்புப்பட்டம் யாது?

(அ) சித்திரக்கவி

(ஆ) ஞானபோதினி

(இ) திராவிட சாஸ்திரி

(ஈ) ரூபாவதி

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) திராவிட சாஸ்திரி

பரிதிமாற் கலைஞரின் தமிழ்ப்புலமையையும் கவிபாடும் திறமையையும் கண்டு யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரனார் “திராவிட சாஸ்திரி” என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினார்.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!