General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 17

51. சரியான பகுதியைக் கண்டறிக:

“கேட்டான்”

(அ) கேட்டு

(ஆ) கேள்

(இ) கேடு

(ஈ) கே

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) கேள்

கேட்டான்-கேள்(ட்)+ட்+ஆன்; கேள்-பகுதி, “ள்””ட்” ஆனது விகாரம், ட்-இறந்தகால இடைநிலை, ஆன்-ஆண்பால் வினைமுற்று விகுதி.

52. அடவி மலையாறு – இச்சொல்லில் உள்ள இலக்கணக் குறிப்பு யாது?

(அ) பண்புத்தொகை

(ஆ) உவமைத்தொகை

(இ) உம்மைத்தொகை

(ஈ) வினைத்தொகை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) உம்மைத்தொகை

“அடவி மலையாறு” – உம்மைத்தொகை.

“அடவியும் மலையாறும்” என்ற தொடரில் அமைந்துள்ள “உம்” விகுதி மறைந்து வந்துள்ளதால் உம்மைத்தொகை. “அடவியும் மலையாறும்” என “உம்” விகுதி வெளிப்பட்டு வந்தால் அது எண்ணும்மை ஆகும்.

53. சரியான பொருளைக் கண்டறிக.

“பருவரல்”

(அ) குகை

(ஆ) துன்பம்

(இ) தூக்கம்

(ஈ) இன்பம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) துன்பம்

54. வழுவற்ற தொடரைத் தேர்வு செய்க:

(அ) வெற்றிலைத் தோப்புக்குச் சென்று வெற்றிலை பறித்து வா

(ஆ) ஆந்தை கத்தியது

(இ) வயலில் ஆட்டுக்குட்டி மேய்கிறது

(ஈ) பெருமழை பெய்தமையால் மரங்கள் வீழ்ந்தது

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) வயலில் ஆட்டுக்குட்டி மேய்கிறது

வெற்றிலைத் தோட்டம். ஆந்தை அலறியது. பெருமழை பெய்தமையால் மரங்கள் வீழ்ந்தன

55. “தன்னொற்று இரட்டல்” எனும் விதிப்படி புணர்ந்த சொல் எது?

(அ) கற்றாழை

(ஆ) சிற்றோடை

(இ) சேதாம்பல்

(ஈ) பொற்றாளம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) சிற்றோடை

தன்னொற்று இரட்டல்: சிற்றோடை-சிறுமை+ஓடை.

“ஈறுபோதல்” விதிப்படி “மை” விகுதி கெட்டு சிறு+ஓடை ஆனது.

“ஈற்றயல் உயிர் கெடல்” விதிப்படி சிற்+ஓடை என்றானது.

“தன்னொற்று இரட்டல்” விதிப்படி சிற்ற்+ஓடை என்றானது.

“உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி சிற்றோடை என்றானது.

56. ஆகு பெயர்களைப் பொருத்துக:

அ. கருவியாகு பெயர் – 1. கம்பரைப் படித்தேன்

ஆ. காரியவாகு பெயர் – 2. காளை வந்தான்

இ. கருத்தாவாகு பெயர் – 3. திருக்குறள் கற்கிறேன்

ஈ. உவமையாகு பெயர் – 4. வானொலி கேட்டு மகிழ்ந்தேன்

அ ஆ இ ஈ

அ. 4 3 1 2

ஆ. 4 2 3 1

இ. 3 1 2 4

ஈ. 4 3 2 1

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. 4 3 1 2

57. பொருத்துக:

அ. நெடுமதில் – 1. ஆறாம் வேற்றுமைத்தொகை

ஆ. வாங்குவில் – 2. வினைத்தொகை

இ. இலைவேல் – 3. பண்புத்தொகை

ஈ. மாறன் களிறு – 4. உவமைத்தொகை

அ ஆ இ ஈ

அ. 3 2 4 1

ஆ. 3 1 2 4

இ. 2 3 4 1

ஈ. 3 4 2 1

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. 3 2 4 1

58. மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக:

(அ) ஆற்றுவார் பணிதல் அது சான்றோல் ஆற்றல்

(ஆ) ஆற்றுவார் அது சான்றோர் பணிதல் ஆற்றல்

(இ) ஆற்றுவார் ஆற்றல் அது சான்றோர் பணிதல்

(ஈ) ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர்

59. பொன்னும் துகிரும் முத்தும் – இலக்கணக்குறிப்பு யாது?

(அ) எண்ணும்மை

(ஆ) உம்மைத்தொகை

(இ) வினைத்தொகை

(ஈ) உவமைத்தொகை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) எண்ணும்மை

”பொன்னும் துகிரும் முத்தும்” என்ற தொடரில் “உம்” விகுதி வெளிப்பட்டு வந்ததால் இஃது எண்ணும்மை ஆகும்.

60. “அந்தமான்” என்ற சொல் அந்த+மான் எனப் பிரிந்து நின்று எப்பொருளைத் தருகிறது

(அ) விலங்கு

(ஆ) நாடு

(இ) அழகு

(ஈ) உலகு

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) விலங்கு

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!