General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 17

81. இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர்

(அ) அகத்தியர்

(ஆ) நக்கீரர்

(இ) தொல்காப்பியம்

(ஈ) பூதஞ்சேந்தனார்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) பூதஞ்சேந்தனார்

மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆவார். இவர் இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர். பத்துப்பாட்டுள் திருமுருகாற்றுப் படை மற்றும் நெடுநல்வாடை ஆகியவற்றை இயற்றியவர். சங்கத்தொகை நூல்களுள் இவர் இயற்றியவை அகநானூறு-17 பாடல்கள், குறுந்தொகை-7 பாடல்கள், நற்றிணை-7 பாடல்கள். புறநானூறு-3 பாடல்கள்

82. “செம்புலப் பெயல் நீர் போல” இவ்வரி இடம்பெறும் நூல்

(அ) பரிபாடல்

(ஆ) கலித்தொகை

(இ) குறுந்தொகை

(ஈ) அகநானூறு

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) குறுந்தொகை

பண்டைத் தமிழரின் மண்ணியல் அறிவு: பண்டைத் தமிழர் நிறத்தின் அடிப்படையில் “செம்மண் நிலம்” என்றும் சுவையின் அடிப்படையில் “உவர்நிலம்” என்றும், தன்மையின் அடிப்படையில் “களர்நிலம்” என்றும் வகைப்படுத்தினர்.

எ.கா: செம்மண்நிலம் “செம்புலப் பெயல் நீர் போல்”- குறுந்தொகை.

உவர்நிலம்: “உறுமிடத் துதவா உவர் நிலம்”-புறநானூறு.

களர்நிலம்-“பயவாக் களரனையர் கல்லாதவர்”-திருக்குறள்.

83. சொல்லையும் பொருளையும் பொருத்துக:

அ. வன்மை – 1.கொடை

ஆ. வண்மை – 2. வலிமை

இ. தண்மை – 3. இடப்பெயர்

ஈ. தன்மை – 4. குளிர்ச்சி

அ ஆ இ ஈ

அ. 2 1 4 3

ஆ. 2 1 3 4

இ. 2 3 1 4

ஈ. 3 2 1 4

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. 2 1 4 3

84. பழியில்லா மன்னன், யார்/எது போற்றும்படி வாழ்வான்?

(அ) மக்கள்

(ஆ) அமைச்சர்

(இ) பிறநாட்டரசர்

(ஈ) நூல்கள்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) நூல்கள்

ஏலாதி

வணங்கி வழியொழுகி மாண்டார்சொல் கொண்டு

நுணங்கிநூல் நோக்கி நுழையா – இணங்கிய

பால்நோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனாய்

நூல்நோக்கி வாழ்வான் நுனித்து”

– கணிதோவியார்.

பொருள்: பிறர்க்குப் பணிந்தும் நல்வழியில் நடந்தும் மாண்புடைய சான்றோர் அறிவுரைகளைப் பின்பற்றியும் நுண்ணறிவு நூல்களை ஆராய்ந்தும், அவை நவிலும் வண்ணம் வாழும் பழியிலா மன்னன் நூல்களெல்லாம் போற்றும்படி வாழ்வான்.

85. மாணிக்கவாசகர் அருளியவை

(அ) தேவாரமும் திருவாசகமும்

(ஆ) தேவாரமும் திருமந்திரமும்

(இ) திருவாசகமும் திருக்கோவையாரும்

(ஈ) திருவாசகமும் திருமந்திரமும்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) திருவாசகமும் திருக்கோவையாரும்

மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் திருவாசகம், திருக்கோவையார் மற்றும் திருவெம்பாவை ஆகியனவாகும். இவற்றில் திருவாசகமும் திருக்கோவையாரும் பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையில் அமைந்துள்ளன.

86. பொருத்தமில்லாத தொடரைக் கண்டறிக:

பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த தமிழர்கள்

(அ) பொருள் தேடுவது ஒன்றையே குறிக்கோளாய் கொண்டிருந்தனர்

(ஆ) அறத்தின் வழியே வாணிகம் செய்தனர்

(இ) கொள்வது மிகை கொள்ளாதவர்கள்

(ஈ) கொடுப்பதும் குறைபடாது கொடுத்தவர்கள்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) பொருள் தேடுவது ஒன்றையே குறிக்கோளாய் கொண்டிருந்தனர்

பழந்தமிழர் அறத்தின் வழியே வணிகம் செய்தார்கள். பொருள் தேடுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொள்ளாதவர்கள். அவர்கள் கொள்வதும் மிகைக் கொளாது, கொடுப்பதும் குறைபடாது வணிகம் செய்தார்கள்.

87. கண்ணதாசனின் படைப்புகளில் “சாகித்ய அகாடமி” பரிசு பெற்ற புதினம் எது?

(அ) வேலங்குடித் திருவிழா

(ஆ) ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி

(இ) சேரமான் காதலி

(ஈ) இராச தண்டனை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) சேரமான் காதலி

1980-ல் “சேரமான் காதலி” என்ற கண்ணதாசனின் புதினத்திற்கு சாகித்ய அகாடமி பரிசு வழங்கப்பட்டது

88. “சாதி களையப்பட வேண்டிய களை” – எனக் கருதியவர்

(அ) பெரியார்

(ஆ) அம்பேத்கர்

(இ) திருவள்ளுவர்

(ஈ) காமராசர்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) அம்பேத்கர்

“சாதி என்பது எல்லாம் வல்ல ஒருவன் கட்டளையால் தோன்றியதன்று. சில குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கு ஆட்பட்ட வேரூன்றிவிட்ட வளர்ச்சியாகும். “சாதி களையப்பட வேண்டிய களை” என்று அம்பேத்கர் கருதினார்

89. சரியான விடையைத் தேர்வு செய்க:

அ. நாவல் பழம் – 1.மேத்தா

ஆ. நந்தவன நாட்கள் – 2.நா.காமராசன்

இ. நிலவுப் பூ – 3. ஈரோடு தமிழன்பன்

ஈ. ஊமை வெயில் – 4. சிற்பி

அ ஆ இ ஈ

அ. 2 1 4 3

ஆ. 2 3 4 1

இ. 1 3 2 4

ஈ. 1 2 3 4

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. 2 1 4 3

90. “தமிழ் மொழியின் உபநிடதம்” என சிறப்பிக்கப் பெறும் நூல்

(அ) திருக்குறள்

(ஆ) தாயாமானவர் பாடல்கள் திரட்டு

(இ) கவிமணி பாடல்கள்

(ஈ) திருமந்திரம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) தாயாமானவர் பாடல்கள் திரட்டு

தாயுமானவரின் பாடல்கள் அனைத்தும் தொகுக்கப்பட்ட தொகை நூல் “தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு” என்று அழைக்கப்படுகிறது. இந்நூலில் 1452 பாடல்கள் உள்ளன. இறைநெறியை வலியுறுத்தும் இந்நூல் “தமிழ்மொழியின் உபநிடதம்” எனப் போற்றப்படுகிறது.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!